ஹால் டிக்­கெட்டை வைத்தால் நடக்கும் அபூர்­வம்: குணங்­குடி மஸ்தான் தர்­காவில் ஆலிம் புலவரின் அற்­பு­தங்­கள்

27

பரந்து விரிந்த சென்­னைப் பட்­ட­ணத்தில் சிறந்த இறை­நே­ச­ராக வாழ்ந்து பல அற்­பு­தங்­களை நிகழ்த்திக் காட்­டிய அதி­சய சித்­தர்­களில் ஒருவர் குணங்­குடி மஸ்தான் சாஹிப் ஒலி­­யு­ல்லாஹ். பக்­தர்­களால் குணங்­கு­டி­யார் அப்பா என்றும் பாவா என்றும் அன்­புடன் அழைக்­கப்­படும் குணங்­கு­டியார் செல்­வந்தர் குடும்­பத்தில் பிறந்தாலும் இறை மீது ஏற்­பட்ட அதீத காதலால் ஆடம்­பர வாழ்வைத் துறந்து அல்­லாஹ்வைத் தேடி காடு, மலை­, குப்பைமேடுகள் என அலைந்து திரிந்தார்.

கிபி. 1788 ஆம் ஆண்டு ராம­நா­த­புரம், தொண்­டியில் பிறந்து தனது 17 வது வயதில் துற­வறம் பூண்­டு, முக்தி பெற்று, இறு­தி­யாக தன­து 50 ஆவது வயதில் சென்னை பழைய வண்­ணா­ரப்­பேட்­டைக்கு வந்­து (அந்த காலத்தில் தண்­டை­யார்­பேட்டை) வந்து ஜீவ அடக்­க­மானார். குணங்­கு­டி மஸ்தான் சாஹிப் இந்தப் பூவு­லகை விட்டு மறைந்து 187 ஆண்­டுக­ள் ஆனாலும் அவ­ரது ஆன்மாவின் புக­ழ் இன்னும் மங்­காமல், அவர் ஜீவ சமாதி ஆகி­யி­ருக்கும் அவ­ரது தர்­காவில் நிலைத்து நிற்­கி­றது.

குணங்­கு­டி மஸ்தான் தர்­காவில், அவ­ர­து கலீபா ஷெய்ஹ் அப்துல் காதிர் நைனார் லெப்பை ஆலிம் புல­வர், குணங்­கு­டி­யாரின் சீடர் ஊமையப்பா என்கிற ஹஸ்ரத் ஷேக் இப்ராஹிம் மற்றும் அவ­ருக்கு பணிவிடை செய்து வந்த காதர் மஸ்தான் மற்றும் அவரது மனைவி மதார் பீவி அம்மா ஆகியோரது அடக்­கத்­த­லங்கள் உள்­ளன.

இவர்­க­ளில் நைனார் லெப்பை ஆலிம் புல­வர் ஜீவ சமாதி ­முன்பு நடக்கும் அதி­ச­யங்கள் வியக்க வைப்ப­தாக அங்கு வழக்­கமாக வந்து செல்­லும் பக்தர் கோடிகள் தெரி­விக்­கின்­ற­னர். ஆலிம் புலவர் ஜீவ சமாதிக்கு சென்றால் நோய், நொடிகள் தீர்­வது மட்­டு­மின்றி இளை­ஞர்கள் வேலை வாய்ப்பு மற்றும் மாண­வர்­களின் கல்வி சம்­பந்­தப்­பட்ட கோரிக்­கை­களும் நிறை­வே­று­கி­றது என்பது அசைக்க முடி­யாத நம்­பிக்­கையாக உள்­ள­து.

பட்டம் பெற்ற இளை­ஞர்­க­ளுக்கு அர­சாங்க உத்­தி­யோ­கத்தை பெற்றுத் தரும் டிஎன்­பிஸ்சி, யூபி­எ­ஸ்சி தேர்­வு எழுதுபவர்கள் ஆலிம் புலவர் ஜீவ சமாதிக்கு ஹால் டிக்­கெட்­டுடன் வந்து மன­மு­றுகி வேண்­டு­கின்­றனர். அது மட்­டு­மின்­றி சிஏ தேர்வு மற்றும் டாக்டர் ஆக வேண்டும் என்ற கன­வுடன் ‘நீட்’ தேர்­வு எழுத வரும் மாண­வர்கள் நைனார் லெப்பை ஆலிம் புல­வர் சமா­திக்கு வந்து தங்­க­ளது ஹால் ­டிக்­கெட்டை வைத்து வழி­ப­ட்டுச் செல்­கின்­றனர்.

அவர்­களில் பெரு­ம்­பா­லானோர் தேர்­வில் வெற்றி பெற்றதாக மகிழ்ச்­சி­யுடன் வந்து ஆலிம் புலவர் பாவா­­வுக்கு நன்றி சொல்லி விட்டுச் செல்­வதை பார்க்க முடி­கி­றது. மேலும் மாண­வர்கள் தாங்கள் தேர்வு எழு­தும் பேனா­வை ஆலிம் புல­வரின் சமாதி மீது வைத்து வேண்டிக் கொண்டு சென்றால் அவர்­க­ளுக்கு நிச்­சயம் வெற்­றியே கிட்­டு­கி­ற­து. மேலும் குழந்தை பாக்­கியம் இல்­லா­த­வர்கள் இங்கு வந்தால் நிச்­சயம் குழந்தை கிட்­டு­கி­ற­து என்­கின்­றார் குணங்­குடி மஸ்தான் தர்கா ஷரீப்பை மூன்­றா­வது தலை­மு­றை­யாக பரா­ம­ரிக்கும் நிர்­வா­­கி ரமி­ஸா.

மேலும் அவ­ர் கூறி­ய­தா­வ­து, ‘தெளிவாக வாய் பேச முடி­யா­மல், திக்கித் திக்கிப் பேசும் குழந்­தைகள், படிப்பில் ஆர்­வ­­மின்றி, மந்­த­மாக உள்ள குழந்­தை­களை ஆலிம் புலவர் அப்பா சமா­திக்கு அழைத்து வந்தால் அவர்கள் புத்தி கூர்­மை­யுள்­ள­வர்­க­ளா­க மாறுகிறார்கள் என்ற அசைக்க முடி­யாத நம்­பிக்கை உள்­ள­து. ஆலிம் புலவர் சமாதியின் தலைப்­ப­கு­தியில் தேன் பாட்­டிலை வைத்து இறை­வனை வேண்டி அந்தத் தேனை குழந்­­தையின் நாக்கில் தடவி உண்ணக் கொடுத்­தால் அவர்கள் விரைவில் நலம் பெறு­கிறார்கள் என்ற அசைக்க முடி­யாத நம்­பிக்­கையும் உள்­ளது.

நைனார் லெப்பை ஆலிம் புல­வரும், குணங்­கு­டி­யாரும் சிறு வயதில் ஒன்­றாக கல்வி பயின்று வந்­துள்­ளனர். அப்­போது ஆலிம் புல­வ­­ருக்கு சரி­யாக படிப்பு வரா­ததால் அவரை ஆசி­ரியர் வகுப்பில் இருந்­து விரட்­டி­ய­டித்து விட்டார். இதனால் கோப­ம­டைந்த ஆலிம் புலவர் காட்­டுக்குள் சென்­று விட்டார். அங்கு அவர் அசந்து உறங்­கிய நேரம் அங்கு வந்த பாம்பு ஒன்று ஆலிம் புல­வரின் நாவில் தீண்டி, எழுதி விட்டு சென்றுள்­ளது. அதன் பின்னர் ஆலிம் புலவர் கல்­வியில் சிறந்த மாணாக்­க­ராக விள­ங்கி­னார் என்ற கருத்தும் நில­வு­கி­றது என்­கின்­றனர் குணங்­கு­டியார் தர்கா வாரி­சுகள்.

தண்­டை­யார்­பேட்டை குணங்­குடி மஸ்தான் தர்­காவில் சத்­த­மின்றி நடந்து வரும், இத்­த­கைய அதி­ச­யங்­களும், ஆச்­சர்­யங்­களும் அங்கு வழக்­க­மாக பய பக்­தி­யுடன் வந்து செல்லும் பக்­தர்­க­ளுக்கு பெரிய விஷ­ய­மாக தெரி­வ­­தில்லை. அது அவர்­க­ளுக்கு பழக்­கப்­பட்­ட ஒன்­றாகி விட்­டது. நம்பி வருப­வர்­களை குணங்­கு­டியார் கை விடு­வ­தில்லை. ஞானம் தேடி வந்­த­வர்­க­ளுக்கு ஞானமும், குறை தீர்க்க கோரி வரு­ப­வர்­க­ளுக்கு தான் பெற்ற இறை அருளால், நிறைகளையும் செய்து கொடுக்­கிறார் குணங்­குடி மஸ்தான்.

குண­­முடன் வந்து குணங்­கு­டி­யாரை குடி கொண்டால் நிச்சயம் அவர்கள் வாழ்வில் ஒளி பிறக்கும் என்­ப­துதான் குணங்­குடி மஸ்தான் தர்­கா­வுக்கு வரும் பக்­தர்­களின் அசைக்க முடி­யாத நம்­பிக்­கை­யாக உள்­ளது.