நவராத்திரி விழா: குமரியில் இரு­ந்­து கேரளா சென்­ற சுவாமி சிலைகள்

30

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் மன்னரின் உடைவாளுடன் ஊர்வலமாக புறப்பட்டு திருவனந்தபுரம் கொண்டு செல்வது வழக்கம். திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் இந்த சாமி சிலைகளை வைத்து பூஜைகள் செய்வர். பத்து நாட்களுக்கு நடக்கும் நவராத்திரி விழா முடிந்ததும் மீண்டும் சாமி சிலைகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும்.

இந்த ஆண்டு நவராத்திரி விழா திருவனந்தபுரத்தில் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது அதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள அருள்மிகு முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்க புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலில் இருந்து பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தமிழக – கேரளா மாநில போலீசாரின் துப்பாக்கி அணிவகுப்பு மரியாதையும் நடந்தது.

அதன்பின்னர் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மனுக்கு கோவில் சார்பாக திருக்கண் சாத்தி வழிபாடு நடந்தது. தொடர்ந்து ரதவீதிகளில் அம்மன் வீதி உலா வந்தது. அம்மன் ஆஸ்ராமம், கோட்டார், பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக தக்கலை அருகே உள்ள பத்பநாபபுரம் அரண்மனையை இன்று இரவு சென்று அடைகிறது. பின்னர், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் பல்லக்கு வாகனத்திலும், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் யானை மீதும் நாளை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. செல்லும் வழி எங்கும் பக்தர்கள் பூ பழங்களுடன் நின்று சுவாமி விகரகங்களை வழிஅனுப்பி வைக்கும் மன்னர்கள் கால பாரம்பரிய நிகழ்சி நடைபெறும்.