வழி நடத்­திய போகரின் ஆன்மா: ஞான மாமேதை குணங்­குடி மஸ்தான் சாஹிப் ஒலி­யு­ல்லாஹ் தர்­கா அதி­ச­யங்­கள்

33

குணங்­குடி மஸ்தான் பிறப்­பு

குணங்குடி மஸ்தான் சாஹிபு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகில் உள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் கி.பி. 1788-ஆம் ஆண்டு பிறந்தார். நயினார் முகம்மது – பாத்திமா தம்­ப­திக்கு மகனாக பிறந்த இவ­ருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுல்தான் அப்துல் காதிர்.

17 வயதில் துற­வ­றம்

குணங்­குடி மஸ்தான் பால­க­ராக இருந்தபோதே தீராத இறைக் காதலில் லயித்துப் போய் திரு­மண வாழ்­வை துறந்து இறு­தியில் ஞானியாக மாறினார். தனது 17வது­ வய­தி­லேயே உலக வாழ்வை துறந்து துற­வறம் பூண்டார். வர­லாற்று ஆசி­ரி­யர்கள் கணிப்பின் படி குணங்குடியார் வாழ்ந்த காலம் காலம் 1788- ஆம் ஆண்டு முதல் 1838 ஆம் ஆண்டு வரை என பதிவு செய்யப்­பட்­டுள்­ளது.

தண்­டை­யார்­பேட்­டையில் ஜீவ சமா­தி

ஒரே இறை­வ­னான அல்­லாஹ்வை அறியும் பொருட்டு இறை தேடல் பய­ண­மாக நாடு முழுவதும் காடு, மலைகள், குப்பை மேடுகள் என சுற்றி அலைந்து குணங்­கு­டியார் இறுதியில் சென்னை தண்­டை­யார்­பேட்­டைக்கு வந்து ஜீவசமாதி அடைந்­தார். குணங்குடியாரை மக்கள் ‘தொண்டியார்’ என அழைத்து வந்தமையால் சென்­னையில் அவர் வசித்து வந்த பகுதி தொண்டியார்பேட்டை என அழைக்கப்பட்டு அதுவே காலப்போக்கில் தொண்டையார்பேட்டை என மருவி இன்றைக்கு ‘தண்டையார்பேட்டை’ என ஆகி விட்­டது.

காதி­ரிய்யா தரீக்கா வழி­யில்….

குண­ங்குடி மஸ்தான் கி.பி. 1805ம் ஆண்டு தனது 17ம் வய­தில் ராம­நா­த­புரம், கீழக்கரை சென்று ‘தைக்காசாஹிபு’ என்று அழைக்கப்பட்ட ஷெய்ஹ் அப்துல் காதிரி லெப்பை ஆலிம் என்ற ஞானியிடம் மாணவ­ராகச் சேர்ந்­து ‘காதி­ரிய்யா தரீக்­கா’ ழியில் இறை ஞானத்தையும், தவ வழிமுறைகளையும் 4 ஆண்­டுகள் கற்றுத் தெளிந்தார்.

மலை­களில் தவம்

தென்தமி­ழ­கத்தில் சதுரகிரி மலை, திருப்­ப­ரங்­குன்றம், ­சி­வ­கங்கை பிரான்­ம­லை, நாக­ம­லை உள்பட பல இடங்களுக்கு சென்று மாதக்­க­ணக்கில் கடும் தவம் மேற்­கொண்­டார். கொடிய காட்டு விலங்­குகள் அதிக நட­மாட்டம் இருக்கும் அடர்ந்த காடுகளில் த­னி­மையில் பல ஆண்­டு ­காலம் தனித்திருந்து தியானத்தில் ஈடுபட்டார்.

மூச்சை மட்­­டுமே உண­வாகக் கொண்­டு…

காட்­டுப்­ப­கு­திகளில் குணங்­கு­டியார் தவம் இருக்கும் சம­யங்­களில் அவர் உணவுக்கு என்ன ஏற்பாடு செய்து கொண்டார் என்பது இதுவரை யாருக்கும் தெரியாத ­மர்­ம­மா­கவே உள்­ள­து. வெறும் மூச்சை மட்­டுமே உண­வாக சுவா­சித்­து அவர் தவம் செய்­தது மாபெரும் அதி­ச­ய­மாக கருதப்­ப­டு­கி­ற­து. புதுக்­கோட்டை, அறந்தாங்கி அருகில் கலகம் என்ற ஊ­ருக்கு குணங்­குடி மஸ்தான் வந்து சென்றதா­கவும் பதி­வுகள் கூறு­கின்­றன.

அடர்ந்த காட்டில் தலை­கீழாக தொங்­கி­ய­ப­டி….

மற்­றொரு திகில் சம்­ப­வம் தொடர்­பான கருத்­துக்­களும் பேசப்­ப­டு­கின்­றன. குணங்­குடி மஸ்தான் சாஹிப் வனப்பகுதியில் தவம் இருப்­பதை தெரிந்து கொண்ட சிலர் அவரை தேடிச் சென்­று பார்க்க முயன்­றுள்­ள­னர். அப்போது குணங்­கு­டியார் ­அங்­குள்ள ஏதா­வது ஒரு மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருப்­ப­தைக் கண்டு அதிர்ச்­சி­யு­டனும், அதி­சயத்­து­டனும் திகிலுடன் திரும்­பியுள்­ள­னர். சுமார் 7 ஆண்­டுகள் வரை குணங்­குடி மஸ்தான் காடு­களில் தவம் இருந்து கழித்ததா­க கருத்­துக்கள் நிலு­­வு­கின்­ற­ன.

வழி­ ந­டத்­திய போகரின் ஆன்­மா

மேலும் இன்­னொ­ரு சுவா­ரஷ்ய தக­வ­லாக பதி­னெட்டு சித்­தர்­களில் ஒரு­வ­ரான போகர் சித்­தரின் ஆன்மா குணங்­குடி மஸ்­தா­­னை ஆன்­மிக வழியில் நடத்திச் சென்­ற­தாகவும் கருத்­துக்கள் நில­வு­கின்­றன.

குணங்­கு­டி­யா­ருக்கு இடம் அளித்த பாவா லெப்­பை

தமி­ழகம் மட்­டு­மின்றி வட மாநி­லங்­க­ளுக்கும் சென்று குணங்­கு­டியார் தனது ஞான உப­தேசங்களை தொடர்­ந்­தார். இறுதியில் சென்னைக்கு வந்து ­தண்­டை­யார்­பேட்­டை­யில் பாவா லெப்பை என்பவருக்கு உரிமையான, முட்புதர்களும், மூங்கில் காடும், சப்பாத்திக் கள்ளியும் மண்டிக் கிடந்த இடத்தில் குணங்­குடி மஸ்தான் தங்கி தனது இறை சேவையைத் தொடர்ந்­தார். பாவாலெப்பை குணங்குடியாரின் மகிமையை உணர்ந்து அந்த இடத்­தி­லேயே அவருக்கு தங்­கு­வ­தற்கு ஆசிரமம் அமைத்துக் கொடுத்தார்.

பிற மதத்­­தைச் சேர்ந்­த­வர்­களும் சீட­ரா­­கி­னர்

குணங்குடியாரின் துறவு நிலையில் சந்­­­தே­க­ம­டைந்த சிலர் அவர் நிகழ்த்­திய பல அதி­ச­யங்­களை கண்ட பின்னர் அவரை மதித்துப் போற்றினர். அவரிடம் ஞான தீட்சை பெற்றனர். குணங்­கு­டி­யா­ரிடம் ஞான தீட்சை பெற்றவர்களில் அந்தக் காலத்தில் சென்னையிலிருந்த ஆற்காடு நவாபும் ஒருவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­க­து. இஸ்­லா­மியர் மட்­டு­மின்றி பிற மதத்தைச் சேர்ந்­த­வர்­களும் குணங்­­கு­டி­யாரின் சீடர்களாக இருந்து அவரை பின்­­பற்­றி­னர். அவர்களில் மகாவித்துவான் சரவணப்பெருமாள் ஐயர், கோவளம் சபாபதி முதலியார் ஆகியோர் மிகப் பிரதானமானவர்களாக இருந்தனர்.

குணங்­கு­டி­யாரை கனவில் கண்ட பக்­தர்­கள்

குணங்­குடி மஸ்தானின் பூ உடல் இவ்­வு­லகை விட்டு மறைந்­தாலும் அவர் மண்­ண­றை­யில் இருந்தபடி, வெளி உல­கில் வாழும் தனது பக்­தர்­­க­ளுக்கு அவ்­வப்­போது தத்ரூப காட்­சி­ய­ளிக்­கிறார் என அதனைக் கண்­டவர்கள் கூறு­கின்­றனர். குணங்­கு­டியாரை கன­விலும், தங்கள் ஞானத்தால் கண்­டவர்களும் அவ­ரது தோற்றம் தர்­காவில் உள்­ள புகைப்­படம் போன்­றுதான் இருந்­தது என கூறு­கின்­றனர். இதனால் குணங்­குடி மஸ்தான் தர்­காவில் குணங்­­கு­டியார் மண்­ண­றையில் இன்னும் உயி­ருடன் வாழ்­கிறார் என நம்­பு­கின்­றனர் அங்கு வாடிக்­கை­யாக வரும் பக்த கோடிகள்.

1838ம் ஆண்டு ஜீவ சமா­தி

குணங்­குடி மஸ்தான் சாகிபு 1838 ஆம் ஆண்டு அதா­வது இஸ்­லா­மிய ஆண்டு ஹிஜ்ரி 1254 ஜமாத்துல் அவ்வல் மாதம் 14ம் நாள் தனது 50 ஆம் வயதில் இவ்வுலக வாழ்வைத் துறந்து ஜீவ சமா­தி­­யானார் என வர­லாற்று நூல்கள் கூறு­கின்­றன. இன்னும் சில பதி­வு­களில் குணங்­கு­டியார் தனது 47வது வயதில் மறைந்­த­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது, அவர் தங்கியிருந்த தண்­டை­யார்­பேட்­டை­யி­­லேயே நல்லடக்கம் செய்யப்பட்டார். அதுதான் இன்று குணங்­குடி மஸ்தான் சாஹிப் தர்­கா­வாக திகழ்­கி­றது. குணங்குடியாரின் தோழர் புலவர் நாயகத்தின் அடக்கத்த­லமும் இங்குதான் உள்ளது.

ஊமை­யப்பா அடக்­கத்­த­ல­ம்

இவர்கள் இருவரின் அடக்கத்த­லத்தை அடுத்­தாற்போல் அங்­கேயே ஊமையப்பா என்கிற ஹஸ்ரத் ஷேக் இப்ராஹிம் ஜீவ­ச­மா­தியும், அவ­ருக்கு பணிவிடை செய்து வந்த காதர் மஸ்தான் மற்றும் அவரது மனைவி மதார் பீவி அம்மா ஆகியோரது புனித அடக்­கத்­த­லங்­களும் இங்கு உள்­ளன. ஆண்­டு­தோறும் குணங்­கு­டியார் ஜீவ­ச­மா­தி­யான அன்று சந்தனக்கூடு உரூஸ் கந்தூரி விழா 14 நாட்கள் கோலா­க­ல­மாக நடந்து வருகிறது.

இறை­நே­சர்­க­ளுக்கு அழி­வில்­லை

‘இறை ­நே­சர்­க­ளுக்கு என்றும் அழி­வில்லை. அவர்கள் மண்­ண­றை­­களில் மறைந்து வாழ்­கின்­றனர் என்பதற்­கேற்ப இவ்­வு­லகில் வாழ்ந்து மறைந்து பல நூற்­றாண்டு காலங்கள், ஆனாலும் இறை நேசர்­களின் புகழ் மங்­காது என்பதற்கு குணங்­குடி மஸ்தான் சாஹிப் தர்கா வர­லாறு சிறந்­த உதார­ண­மாக திகழ்­கி­றது என்றால் அது மிகை­யா­காது.